சத்தியமும் வன்முறையும்

காந்தியினுடைய Holy Trinity என அவருடைய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை என்ற மூன்று புத்தகங்களையும் குறிப்பிடுவார்கள். காந்திய ஆர்வலரும், காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், தன்னுடைய நாளைய காந்தி என்ற புத்தகத்தில் இம்மூன்று புத்தகங்களைப் பற்றிய ஒரு கச்சிதமான குறிப்பைத் தந்திருப்பார். இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறார். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு… Continue reading சத்தியமும் வன்முறையும்

ஆறு தாரகைகள்

இசையும், சிகரெட்டும் இந்த நாவல் முழுதும் கிரங்கிக் கிடக்கிறது. ஒன்று காற்றுடன் இயைந்து ஒலியாகிறது; மற்றொன்று காற்றுடன் புகைவிட்டு விளையாடுகிறது. புகைப்பதற்கும், இசைப்பதற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை அல்லது ஒவ்வாமை இருப்பதை உள்ளூர உணரமுடிகிறது. இன்னதுதான் என்று வரையறுக்க முடியவில்லை. ஜோத்ஸ்னாவையும், கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இவ்விரண்டும் தான். இவர்களிருவருக்குமிடையை நடக்கும் உரையாடலாக விரியும் இந்த நாவல் இருவருக்கும் இந்துஸ்தானி இசையின் மேல் இருக்கும் பற்றையும், ரசனையையும், மேதமையையும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறது. ஆனால், கிருஷ்ணனிடம் இருக்கும் இலக்கிய ரசனையும்,… Continue reading ஆறு தாரகைகள்

அறிவும் உண்மையும்

சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் எப்போதும் இடைவெளி உண்டு என்பதை தத்துவங்களின் உளறல் என்று அன்றாடம் அல்லது உலகியல் விலக்கி வைத்து விடக்கூடும். ஒரு சொல் அதன் பொருளை எட்டுவதற்கு, ஒருவருடைய சமூக அமைப்பு, அனுபவம், அறிவு என்றவற்றால் ஆன ஒரு conduit வழியாக பயணிக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் இந்த இடைவெளி ஒரு புத்தகத்தாளின் இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள உணரமுடியாத இடைவெளி; பல நேரங்களில், இது புத்தகத்தின் முதல் தாளுக்கும் கடைசித் தாளுக்கும் இடையே… Continue reading அறிவும் உண்மையும்

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

காலை நடையில் திடீரென நம்முன் முளைத்தெழுந்திருக்கும் செடி நம்மை திகைக்க வைப்பதில்லை. ஆனால், திடீரென அங்கு அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு ஒரு பதட்டத்தை உருவாக்கத்தான் செய்கிறது. இது எங்கிருந்து வந்தது என்ற ஒரு திகைப்பு ஒரு புறம் என்றால், அது வந்த பாதையை அறிய முயல்வதற்கான இயலாமை இன்னொரு புறம். காலை நடையின் போது வெகு தொலைவில் இக்குரங்கு வந்து கொண்டிருப்பதை கவனிக்கும் வாய்ப்பு நமக்கிருந்திருந்தால் இந்த திகைப்பு இருப்பதில்லை. கிட்டத்தட்ட நவீனம் என்று நமக்கு முன்… Continue reading ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

யாக்கை நாவல் பற்றி

சிலவற்றை அல்லது இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான். இந்த கலைமனத்தின் நிறைவின்மையின் ஊற்றுக்கண் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் தர்க்கபுத்தி இயங்கும். சுப்புவின் துயர் மிகுந்த பால்யமும், அங்கிருந்து அவனுக்கு கிடைக்கும் சமூகம் மற்றும் பாலியல் பற்றிய புரிதல்களும் இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் அலாதியானது. வாசகர்களை இயல்பாக… Continue reading யாக்கை நாவல் பற்றி

சுதந்திரமும் அரசாங்கமும்

சில புத்தகங்கள், திடீரென இதுவரையிலான வாசிப்பை, அதன் வழி அடைந்த சில புரிதல்களை உடனடியாக தொகுத்து கொள்ள வேண்டிய அவசியத்தை அல்லது நிர்பந்தத்தை ஏற்படுத்தும். எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் பொருளியல் என்பது அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறைகள் போல நவீன யுகத்தின் கண்டுபிடிப்பு என்ற பொதுப்புரிதலை இல்லாமலாக்குகிறது. வரவு செலவுகளை துல்லியமாக கணக்கிட உதவும் Double entry book keeping system (வரவும் செலவும் should net to zero என்ற Accountingன் பாலபாடம்)  நவீன யுகத்திற்கு… Continue reading சுதந்திரமும் அரசாங்கமும்

What went wrong with CAPITALISM

எதற்கு இந்த புத்தகத்தை எடுத்தேன் என்பதை தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். முதலாளித்துவம் சரிவை நோக்கிச் செல்கிறது என்ற Narrative சமீப காலமாக Grand Narrative ஆக மாற ஆரம்பித்ததால் இருக்கலாம். 'What Went Wrong with CAPITALISM' என்ற தலைப்பு இயல்பாகவை இப்புத்தகத்தை வாங்க வைத்தது. இதை எழுதியவரைப் பற்றி பிறகுதான் google செய்து தெரிந்து கொண்டேன். Ruchir Sharma's profile also compelled me to take this book. https://ruchirsharma.com/ இன்னமும் புத்தகத்திற்குள்ளேயே… Continue reading What went wrong with CAPITALISM

தாகூரின் ஜப்பான் பயணம்

கூடையை நிறைத்திருக்கும் ஆரஞ்சு பழங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே இருக்கும் ஆப்பிள்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை. ஆனால், கண்ணை உறுத்தாத ஓர் ஓர்மையும் அழகும் கொண்டவையா என்பது, அந்த கூடையின் நிறம், அது வைக்கப்பட்டிருக்கும் இடம், பார்ப்பவரின் அப்போதைய மனநிலை, அவருடைய இயல்பு என நிறைய காரணிகளைப் பொறுத்துள்ளது. தன்னுடைய ஜப்பானிய பயணத்தை தாகூர் விவரிக்கும் விதம் அலாதியானது. கடலைகளின் நிலையாமையையும், அதில் கலக்கும் நதிகளின் நெகிழ்வையும், நிலத்தின் இறுக்கத்தையும் கொண்டிருக்கிறது. காற்றும், வானமும் தொடர்ந்து முயங்குகின்றன. இவ்விவரணைகள்… Continue reading தாகூரின் ஜப்பான் பயணம்

நிலமெல்லாம் ரத்தம்

தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம். உலகெங்கும் பரவி, தங்களுடைய அறிவாற்றலால் தனக்கென மரியாதைக்குரிய இடத்தை (பிரிட்டிஷ் பிரதமராகவும் ஒரு யூதர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்) அடைந்த பின்பும் கூட, எது யூதர்களை அமைதியிழக்கச் செய்திருக்கும் என்பது அவர்களுடைய வரலாறு மற்றும் பண்பாடுகளிலிருந்து விலகி நின்று பார்ப்பவர்களுக்கு எப்போதுமே  புதிர் தான். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை,… Continue reading நிலமெல்லாம் ரத்தம்

இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்

தனிமனிதன், அனைத்தையும் விட மிக முக்கியமாக கருதப்படுவது, மதத்திலிருந்து விலகி அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனயுகத்தில் தான் என்ற பொதுப்புரிதலை சற்று குலைத்திருக்கிறது இருத்தலியத்தின் வேர்களை தேட முயலும் இப்புத்தகம். சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதன் என்று பகுத்திருக்கும் இந்த நவீன யுகம், நான் இச்சமூகத்தின் விளைவல்ல; இச்சமூகம் தான் என்னுடைய விளைவு என்று அத்தனிமனிதனை அறைகூவச் செய்கிறது. பகுத்தறிவுக்கு முந்திய மதக் காலத்திலும்,  இக்குரல் வலுவாக ஒலித்திருக்கும் என்பதை கீர்கேகார்ட் (Søren KierkegaardDanish theologian and… Continue reading இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்